புதிய கண்ணகி ******************** கற்பு கடைச்சரக்காய் மாறிப் போச்சு,...
புதிய கண்ணகி
********************
கற்பு கடைச்சரக்காய் மாறிப் போச்சு,
கவலையில்லை கண்ணகிக்கு,
நம்பிக்கையில் தீ வைத்து
நாளொரு மேனியாக
நல்லவன் போல் வேசம் போடுகிறானே..
அதுதான் கோபம்.!
துரோகத்தின் உச்சத்தில்
தீப்பற்றி எரிகிறது உடம்பெங்கும்,
ஆணும் பெண்ணும் செய்த தவறுக்கு,
பெண் மட்டும் பலியாவது
யார் வகுத்த நியதி,
நீதி கேட்டுப் போராடினால்
ஒரு தடவை போன கற்பு
ஓராயிரம் தடவை போகும்
ஊடகங்களால்,
அவளே முடிவெடுத்தாள்
அவளே தண்டனை கொடுத்தாள்,
அனுபவித்தவளுக்கே தெரியும் வலியின் கொடுமை!
காமத்துடன் வந்தவனை
மோகத்துடன் பார்த்தாள்,
அணைத்தாள் அணைத்தான்,
ஆடைகளற்ற நேரத்தில்
அறுத்தெடுத்தாள் ஆணுறுப்பை,!
கண்ணகியாய் வேண்டும் என்பவர்கள்
இராமர்களாய் இருப்பதில்லை,
மாதவியாக ஆக்கி விட்ட சமூகத்தில்,
கண்ணகி வேடங்கள்
இரவெங்கும் அரங்கேறுகிறது வெளிச்சத்தில்!
***********************************