திருமணம் ஆன மறுநாளே விவாகரத்து!! கணவனுக்கு அல்ல... என்...
திருமணம் ஆன மறுநாளே விவாகரத்து!!
கணவனுக்கு அல்ல...
என் உயிர் தோழனுக்கு ..!!!
தோழனே ..!
நான் உனக்கு மணவிலக்கு அளித்துவிட்டேன்...
மனதால் விலக்க
முடியவில்லை ...!!
ஊரார் பார்வையில் உன் உருவம் ஆண்மகனாக..!
என் உள்ளத்தின் பார்வையில் நீ என்றும்
நண்பனாக ...!!
தேகம் வளர்ந்து வாலிபம் தொட்டாலும் ..
மனம் இன்னும் சிறு பிள்ளை நட்பாகவே உன் கை பிடித்து வருகிறது ...!
உன்னை புரியாமல் பிரியவில்லை ....!
உன்னை பிரியாமல்
புகுந்த வீடு சுகம் இல்லை ...!
இதை நீ புரிந்தால் போதும்!!!
தொடாமலேயே தொடரலாம்
நம் நட்பை
மனதில் ...!!
பார்க்காமலே பழகலாம் நினைவில் ..!!