எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூ உலகம் பிறக்கும் விண்ணகம் பார்த்தேங்கும் பூக்களை விட்டு,...

பூ உலகம் பிறக்கும்


விண்ணகம் பார்த்தேங்கும் பூக்களை விட்டு,
வண்டுகள்  தேனோடு பயணிக்கும் விண்ணில்,
தான்போக முடியாத வானத்தில் தனது,
தேன்போகச் சகிக்குமா பூவேஉன் மனது,
சருகாகக் காய்வதா வானத்தில் மிதக்க,
உரமாகிப் புதைவதா தேன்வண்டு சுவைக்க,
மகரந்த வெளியினை கொடுஞ்சிறை ஆக்கி,
மதங்கொண்ட வண்டினை அடைத்துயிர் போக்கி,
சிறகுகள் பறித்து வானிடை உலவு,
பிறகுதான் பிறக்கும் பூக்களின் உலகு !





பதிவு : Karthick
நாள் : 18-Jul-21, 2:38 pm

மேலே