எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விற்பனையாகாத கற்பனைகள் 🏵️ கற்பனையிலேயே தன் கனவுகளை முடக்கிகொண்டாள்....

விற்பனையாகாத கற்பனைகள் 🏵️


கற்பனையிலேயே தன் கனவுகளை முடக்கிகொண்டாள்.

வெளிச்சம் தீண்டாத தன் வாழ்வின் இளமையை, விரக்தியால் நிரப்பினாள்.

தாவல்களும் தழுவல்களும் காட்சியாய் விரியாமல், காணலாய் மறைந்தது.

மூச்சுக்காற்றின் சுவாசங்களும், மெல்லிய முனகல்களும் ஆசுவாச பெருமூச்சொன்றில், அனாதையாய் திரிகிறது.

தீயாய்ச்சுடும் தேகத்தின் தாகத்திற்கு- தன் கண்களின் நீரை விலையாய் கொடுக்கிறாள்.

வயதாகிவிட்டதே.!! எனும் வார்த்தையில் தான், எத்தனை அம்புகள் மறைந்திருக்கிறதோ.??

அந்த இரணமான இதயத்தில் கசிந்து வெளியேறும் செந்நீர்த்துளிகளுக்கே வெளிச்சம் 😥🏵️

பதிவு : குறள்மணி
நாள் : 6-Apr-22, 11:21 pm

மேலே