சுதந்திர தின விழா வாழவைக்கும் வாழிய பாரதம் என்று...
சுதந்திர தின விழா
வாழவைக்கும் வாழிய பாரதம் என்று வணக்கம் கூறிவந்த வணிகனே
அப்போது தெரியவில்லை அயலவனின் நோக்கம் அடிமைத்தனம் என்று
பார்த்து வியந்த என்நாட்டின் வளங்களை படகேறி அள்ளிச் செல்ல நினைத்தாயோ
கொடுத்துப் பழகிய உள்ளங்கள் பறித்து செல்ல ஒருபோதும் அனுமதிக்காது
தேன் என்னும் சுதந்திரம் மக்கள் அறிய வெள்ளையன் கூட்டிலே கல்லெறிய
அகிம்சை வழியில் ஒரு போராட்டம் அடிமைத்தனத்தை விலக்க
அறத்தின் வழியில் ஒரு போராட்டம் எங்கள் வீரத்தை தெரியப்படுத்த
பாரதி வரிகளோ சுதந்திரத்தை விதைக்க
ஒருநாள் என் மூவர்ணக்கொடி பறக்க
பகைவனோ எம்வீரம் கண்டு திகைக்க
சுதந்திரத்தால் என்நாடு சிறந்தோங்கும்
வெள்ளையர்கள் கொடுத்தான் சுதந்திரம் காரணம்
என் வீரர்கள் செய்த தந்திரம் செய்த மக்களின் தியாகம் ஒருபோதும் மறையாத எந்நாட்டின் வீரம் பெற்ற சுதந்திரத்தை பேணிகாப்போம் உயிர் விட்ட தியாகியின் மானம் காப்போம்