உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)

உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)

கொட்டும் பனியில்
வெம்பும் பிஞ்சுகள்
கோடை மழையில்
குடைசாயும் வேர்கள்
கொளுத்தும் வெயிலில்
கருகும் தழைகள்

தண்டையும் மொட்டையும்
தனதாக்கி கொள்ளும் பூச்சிகள்
கிழங்குளையும் காய்களையும்
கிழித்து போடும் விலங்குகள்
ஒன்று சேரும் தாணியத்தை
உருக்குழைக்கும் பறவைகள்

இப்படி
சகலத்தையும் தாண்டித்தான்
சந்தைக்கு வருகிறது பொருள்கள்
அடிமட்ட விலையில் அள்ளி
இடையில் கடையில் விலைவைத்து
எல்லோரும் இன்பமுற‌
வராதாதை நினைத்து வருந்தாமல்
வயல் தேடித்தான் போகிறது கால்கள்...

சரிதான்
உழவின்றி உலகில்லை ‍
உழவனுக்குதான் ஒன்றும் இல்லை...!

எழுதியவர் : தினைகுளம் கா.ரமேஷ் (10-Jan-13, 4:04 pm)
பார்வை : 133

மேலே