இது தான் எங்கள் ரஜினி..!!

நினைவை சற்றே இழந்தாலும்,
தூக்கத்தில் துரத்தி கேட்டாலும்,
என்னை நானே மறந்தாலும்,
என்றும் சொல்வேன்
எங்கள் ரஜினி ரஜினி தான்...!!

வார்த்தைகளில் உடைக்க முடியா
உணர்வுகளை ஒற்றை துளி கண்ணீர்
ஓங்கி உடைப்பது போல,
ரஜினி எனும் ஒற்றை வரியில்
இதயம் படபடக்கும்,
ரத்தம் சீறிப்பாயும்,
நரம்புகள் புடைக்கும்,
மூளையில் மின்சாரம் பாயும்..!!
இது தான் எங்கள் ரஜினி..!!

எப்பிறவியும் தேவையில்லை,
ரஜினி பிறந்த இப்பிறவி போதும்,
நானும் கர்வம் கொள்வேன்,
நானும் மனிதன் என்று..!!!
வாழ்க்கையில் வலியும்,
வலிக்கான வழியையும்
தன்னை வைத்து விளக்கி காட்டிய,
மாபெரும் மனிதனில் மனிதன்..!!
இது தான் எங்கள் ரஜினி..!!

ரஜினி எனும் காந்த வரியை,
செய்திதாளில் படித்தாலோ,
தொலைக்காட்சியில் பார்த்தாலோ,
வானொலி அலையில் கேட்டாலோ,
மெய் மறந்து,
என் பெயர் மறந்து,
சற்று இதயம் வீங்கி,
பின்பு தான் நான் நானாகிறேன்..!!
இது தான் எங்கள் ரஜினி...!!

எழுதியவர் : மனோ ரெட் (16-Mar-13, 3:01 pm)
பார்வை : 131

மேலே