உன்னால் கசக்கப்பட்ட காகிதம் நான்..!!

பள்ளிகூட குழந்தை நீ,
உன்னால் கிழிந்த புத்தகம் நான்..!!

வானவில் வரைந்த வண்ணம் நீ,
உன்னால் சிதறிய ஓவியம் நான்..!!

சட்டென பெய்த மழைத்துளி நீ,
உன்னால் மடிந்த காளான் நான்..!!

சில்லென வீசிய தென்றல் நீ,
உன்னால் உடைந்த பலூன் நான்..!!

ஓங்கி வளர்ந்த மரம் நீ,
உன்னால் சுவாசம் இழந்த உயிர் நான்..!!

கூர்மையான அழகிய உளி நீ,
உன்னால் உடைந்த சிற்பம் நான்..!!

மகிழ்ச்சி கொண்டாடும் இதயம் நீ,
உன்னால் அடங்கிய துடிப்பு நான்..!!

முட்கள் நிரம்பிய பூச்செடி நீ,
உன்னால் கிழிந்த சிறு இலை நான்..!!

உயர பறக்கும் பருந்து நீ,
உன்னால் இறக்கை இழந்த பட்டாம்பூச்சி நான்..!!

எல்லாமறிந்த தண்ணீர் நீ,
உன்னால் கரைந்த கண்ணீர் நான்..!!

கில்லாடி கண்ணாடி நீ,
உன்னால் உடைந்த பிம்பம் நான்..!!

தேடி எடுக்கக்கபட்ட வார்த்தை நீ,
உன்னால் ஒதுக்கப்பட்ட எழுத்து நான்..!!

அழகுற எழுதப்பட்ட கவிதை நீ,
உன்னால் கசக்கப்பட்ட காகிதம் நான்..!!

எழுதியவர் : மனோ ரெட் (27-Mar-13, 10:46 am)
பார்வை : 225

மேலே