என் கவிதைக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம்...???

காதலியே காதலியே என் இதயக்கதை கேளாய்,
கதவில்லா மாளிகை தாழ் திறந்து நிற்பது பாராய்,
சிப்பிக்குள் விழுந்த முத்தெனவே
நெஞ்சை கிழித்து உட்புகுந்தாய் நீ...!!!
விட்டு சென்ற உன் நிழலை
கட்டி வைக்க கயிறு தேடி அலைந்து,
என்னுயிர் கோர்த்து நிற்கின்றேன் நான்...!!

அந்தி மாலை வேளை அழகியே உன்னை காண
சிந்தனை இழந்து நிற்கின்றேன்..!!
வீசும் காற்றும் உன்னை கவர்ந்து செல்ல
வாசல் தேடி தினம் அலைகின்றேன்..!!
சின்னபிள்ளை போல் நான் விழி பிதுங்க,
கை கொட்டி சிரித்து நீ விலக,
வந்தது சோதனை காலமென நானிருந்தேன்..!!

முடிவிலியாய் நம் காதல் முட்டி செல்ல,
முதல் பாதை தேடியே நான் தொலைந்தேன்..!!
உன் இதயக்கூட்டின் ஒரு வாசல்
இரும்பினால் தட்டி திறக்க எண்ணினேன்..!!
தட்டி பார்த்தும் திறக்காமல்,
சாவி இருந்தும் நீ கொடுக்காமல்
என்னை இதயதிருடன் ஆக்க பணிக்கின்றாய்...!!

இவ்வாறு உன்னை பற்றிய என்வரிகளுக்கு
என்ன தலைப்பிட்டு உயிர் கொடுக்கலாம்..??

எழுதியவர் : மனோ ரெட் (23-Apr-13, 2:24 pm)
பார்வை : 92

மேலே