சின்ன சின்ன நியாயங்கள்....!!!

சோகத்தில் கடவுள் வழிபாடு என்பது,
பொருளை தொலைத்த இடத்தில் தேடாமல்
எங்கேயோ போய் தேடுவது போல....!!

குழந்தைக்கு தாய் தரும்
மிகப்பெரிய தண்டனை
பேசாமலிருக்கும் மௌனமே...!!!

பொய்கள் இருக்கும் வரை மட்டுமே
உண்மையின் பேச்சுக்கு
மதிப்பும் மரியாதையும்..!!

எதிர்பார்ப்பு என்பது
நினைத்தது கிடைக்க வேண்டும் என்பதல்ல
நினைக்காததும் கிடைக்க வேண்டுமென்பதே..!!

ஏமாற்றம் என்பது
ஒருவரால் ஏமாற்றப்படுவது இல்லை
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதே..!!

முடிந்த வரை முயற்சி செய்யலாம்
முடியாது என்று தெரிந்த ஒன்றை
முயற்சி செய்வது முட்டாள்தனம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (5-Jun-13, 10:22 am)
பார்வை : 123

மேலே