எழுதுகிறான்

எழுதும் வழி
வலியாகத் திரிய
எழுதும் பொழுது
இரவாக மாற
எழுதும் நிகழ்வு
சோர்வாகத் திரும்ப
எழுதும் நிலை
படுக்கையாகத் தெளிய
எழுதும் எண்ணம்
கனவாக ஊசலாட
எழுதினான் வேகமாக
ஆழ்ந்த உறக்கத்தில்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Oct-13, 4:40 pm)
பார்வை : 96

மேலே