நடமாடும் நதிகள் - பகுதி 5

முன்னுரை:

தனித்தனியாய் நடமாடும்

ஹைக்கூகளை இணைத்தால்

பிறக்கும் ஒரு கதை!

..

பயனின்றி பாயும்

நதிகளை இணைத்தல்

நாட்டின் வளத்திற்கு விதை !

..

நதிகளின் கரைகளில் சற்றே உலவிட உங்களை அன்புடன் அழைத்திடும்

- கருணா

*******************

நடமாடும் நதிகள்!

*******************

கவிகின்றது இருள் !

கூடு திரும்பும் பறவைகள் -

மரத்தில் பாம்பு !
..

கள்ளுண்ட வண்டு!

காய்ந்த மாடு - நொறுங்குகின்றன

கண்ணாடி வளையல்கள் !

..

ஆதாமின் குற்றத்திற்கு

நாட்டாமை தீர்ப்பு - கடன்

வாங்கி கல்யாணம்!

..
வறண்ட பூமியில்

விதியின் யுத்தம் - கண்ணீரில்

கரைகிறது கஞ்சி !

..
மேற்கு மலையோரம் !

மேய்கின்றன ஆடுகள் - தூரத்தில்

வருகிறான் வெட்டுபவன் !

..

வெட்டுப்பட்டது மின்சாரம்

வேலி தாண்டுகின்றன - இரவில்

வேங்கையான வெள்ளாடுகள் !

..
கையூட்டு ஓநாய்களுக்கு

சுரண்டிக் கொடுப்பதை - கவனிக்கும்

குட்டி சிரிக்கின்றது!

..

நடமாடும் நதிகள் !

புலம் பெயர்ந்த - ஊருக்குள்

சாலைகளில் படகுகள் !

..

புதையுண்ட நீர்நிலைகள்!

தாறுமாறாய் கட்டிடங்கள்- தடுமாறுகிறது

வழியின்றி தண்ணீர் !

..

அலைகின்ற நதிகள்

கடலில் கலக்கின்றன - இதோ

நதிகளின் முகத்துவாரம் !

..

பின்னுரை:

நீச்சலறியா என்னை

ஹைக்கூ நதியில் தள்ளிய

ஜின்னாவுக்கு நன்றி.

..

கற்றேனோ ..நீந்திக்

கடந்தேனோ கரைக்கு - மீண்டும்

வந்து விட்டேன் !! ****
...

நன்றிகளை உரித்தாக்குகிறேன்
திருவாளர்கள் கமல் காளிதாஸ் , முரளி
ஆண்டன்பெனி இவர்களுக்கும் !

எழுதியவர் : கருணா (10-Feb-16, 12:21 am)
பார்வை : 848

மேலே