ஒரு பக்கக் காதல் கதை பாகம் -10

இருவரும் உரையாடிக்கொண்டே அடுத்து இருக்கும் கழிவறைக்குள் நுழைந்தார்கள் அதனை உணர்ந்து நின்றாள்

அவள்: பெண்கள் பெண்களாய் இருப்பதே இங்கமட்டும் தான் இங்கயும் ஆணாதிக்கமா ?

எனக்கூறியவுடன் இல்லையென தலையசைத்து சிறுபுன்னகையுடன் திரும்பிவந்தான்

5 நிமிடம் கழித்து காக்கிநிற உடுப்பணிந்து வந்தாள்

அவன்: படத்துல வர்றமாதிரி இப்பல்லாம் அமுல் பேபி கூட போலீஸ் ஆகுது

அவள்: காவல் துறைக்கு மட்டும்தான் காக்கி சொந்தம்ங்கிற எண்ணம்கூட சினிமாவுலதான் வரும்

என பேசிக்கொண்டே தனது பஜாஜின் ஆதிகால சேடக் வண்டியினை நகர்த்தினாள் நிறுத்திய இடம் ..ஆரம்பப்பள்ளி )

அவள்: இந்த சாவி பொறுமையா அந்த ஸ்கூல் வேன் பின்னாடி வா ..(என கூறி மழலைகள் நிறைந்த மாக்ஸி வேனை மெதுவாக நகர்த்தினாள்)

அவன் அங்குள்ள சிறுவனிடம் : அக்கா என்ன பன்றாங்க இங்க ?

சிறுவன்: அக்காதான் எங்க ட்ரைவீ (என கூறி குதித்து சென்றான்)...பட்டாம்பூச்சிகளுடன் சிறகடித்தது அந்த பூவும் வண்டும் ..

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (18-Oct-16, 1:21 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 350

மேலே