வயிறு நிரம்பாதவன் மூளையில் வரிகள் நிரம்பாது

கவிதைக்கு வேண்டுமானால்
வாயும் வயிறும்
இல்லாதிருக்கலாம்
ஆனால்
கவிஞனுக்கு உண்டு

படைப்பாளிகளை உருவாக்குங்கள்
பிரபலங்களுக்கு தன் கவிதையை
விற்க தெரியும்
ஒரு ஏழைக் கவிஞனுக்கு
அது விற்றால்தான்
விறகு எரியும்

கவிதை என்றாலே
வைரமுத்துவையோ
கண்ணதாசனையோ தேடாதீர்கள்
ஏதோ ஒரு ஏழை படைப்பாளியின்
ஏக்கம் நிறைந்திருக்கும்
புத்தகமும் அங்கே இருக்கும் தேடுங்கள்

வயிறு நிரம்பாதவன் மூளையில்
வரிகள் நிரம்பாது
பிரபலமாக தேடாமல்
ஒருவனை பிரபலமாக்க தேடுங்கள்

தமிழ் வளர்க்க
தமிழ் தமிழ் என பாடுவதை விட
ஒரு தமிழ் படைப்பாளியை
வளர்க்க கூடுவது மேல்

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (3-Feb-17, 11:55 am)
பார்வை : 76

மேலே