அப்பா
அப்பா!
உன் உயிரில்
உதிர்ந்த விருச்சம்
நாங்கள்!
உன் மார்பு
எங்கள் தேன்க்கூடு
அப்பா!
எங்கள் மன போர்க்களத்தில்
குழப்பம் நீக்கிய
தெளிந்த ஓடை நீங்கள்!
உங்கள் உதிரம் உதிரும் போதும்
உதட்டு சிரிப்பை
அருவியை போல் உதித்தவர்
விண்மீன்கள் கூட்டம் எமை தாக்க
வீழ்கின்ற போதும் எமை தாங்கிய
கொடை மனம் கொண்ட பாதுகாவலன்....
கர்ணன் மறு உருவம்
எங்கள் பிறவி முழுவதும்
அன்பை மட்டும்
அருளிய வள்ளல்....
வீழ்கின்ற நேரம் கூட
உங்கள் மடி தரும்
நம்பிக்கை சுகம்
வெற்றியை எமதாக்கியது....
எங்கள் தோல் தட்டி
என் பிள்ளை என்று
மார் தட்டும் உத்தமன்.....
உன் பாதையில்
முட்கள் இருந்தும்
எங்கள் பாதையில்
இலவம் பூவை வீசிய
பரந்தாமன்!
அப்பா!
உன் போல் இல்லை
ஒருவரும்
எமக்கு தியாகம் செய்ய
-மூ.முத்துச்செல்வி