நாளையென்ன நாளை

நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! - உன்
. நல்லருளை இன்றனுப்பு வரதராஜா !
நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா - உன்
. நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா !
தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே - மனம்
. தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே
ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா - அட
. அம்பிகையின் சோதரனே வரதராஜா !

காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ - உன்
. கழல்பிடிக்க விளையாட்டு கொண்டிருப்பதோ
ஓலமிட்டு கெஞ்சுமொலி கேட்கவில்லையோ - என்ன
. ஓரவிழியின் ஜாலமெலாம் பிள்ளைமுன்னமோ ?
தோலிறுக்கம் மொழிநடுக்கம் நேரும்போதுதான் - உரு
. தோற்றியெனைத் தேவலோகம் காட்டுமெண்ணமோ ?
பாலனிட்ட கவிப்புலம்பல் மாண்டுபோகவோ - ஒரு
. பார்வையொளி வீசமனம் சொல்லவில்லையோ ? (நாளையென்ன...)

காத்திருப்பு நன்மையென்று கண்டபோதிலும் - உன்
. கருணைமழை கடமைவினை அதைமறுப்பதோ ?
பூத்திருக்கும் கண்களுக்குள் புயல்நடப்பதோ ? - வளிப்
. பூழ்திவந்து நெஞ்சினோரம் வெடிவெடிப்பதோ ?
சாத்திரங்கள் சொல்வதுபோல் வாட்டுமெண்ணமோ ? - இந்தச்
. சமகாலத் தீயட்டம் இன்னும்மன்னுமோ ?
ஆர்த்தெழுந்து கையிலெனைத் தூக்குராஜா - உன்
. அருட்கமலப் பாதத்தைக் காட்டுராஜா !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Jun-17, 8:31 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 108

மேலே