பனி

வெள்ளைக் கம்பளம் ஒன்று
பூமித் தாயின் மடிதனில்
விரிந்து கிடக்கிறது.....
ஓங்கி உயர்ந்து நிற்கும்
மரங்களும் - தேவதைகள் போல்
வெள்ளை அங்கி அணிந்து நிற்கின்றன.....
சூரியனின் ஒளிப் பிம்பங்கள்
பட்டது தான் தாமதம்
புன்னகை கீற்று போல
மெல்லென மின்னி
உருகி மௌனமாய்
கரைந்தோடின -
பனித் துகள்கள்.

எழுதியவர் : பி.தமிழ் முகில் (27-Aug-11, 7:18 am)
சேர்த்தது : Tamizhmuhil
Tanglish : pani
பார்வை : 289

மேலே