ஆசை மரம்

அந்த ஆலயத்தின்

முகப்பில்......உயர்ந்து

முதற்கடவுளுக்கு தன

மடிதனில் இடமளித்து- கம்பீரமாய்...

உயர்ந்து நின்றிருந்தது-

அம்மரம் !

இலை.....பூ....கிளை......

என்று எதுவுமே தெரியாமல்

மரம் முழுதும் வியாபித்திருந்தன

துணி முடிச்சுப் பழங்கள்!

எத்தனை எத்தனையோ

உள்ளங்களின்-

ஆசைகள்...... கனவுகள்.....

நம்பிக்கைகள்.... கற்பனைகள் ......

திருமண வரம் வேண்டி

கன்னியவள் கட்டி வைத்த

காதல் முடிச்சு.....

பிள்ளை வரம் வேண்டி

தன் முந்தானையில்

தொட்டிலிட்டு உருகி நிற்பவளின்

பாச முடிச்சு.....

வேலை வேண்டி

இளைஞன் அவன் போட்டு வைத்தான்-

கனவு முடிச்சு!

இறைவனிடம் வரம் வேண்டி

எத்தனையோ விண்ணப்பங்கள் .........

அந்த அடர்ந்த மரத்தின் கிளைகளில்....

எத்தனையோ உள்ளங்களின்

சுகங்கள்.....சுமைகளை....

சுமந்து கொண்டு !!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (6-Nov-11, 3:52 am)
சேர்த்தது : Tamizhmuhil
Tanglish : aasai maram
பார்வை : 271

மேலே