எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைப்பு: மனிதம்....

மனிதம் யாரடா இங்கு புனிதம்...!

மனிதனாக பிறந்ததே பெரும் துயரம்..!

நான் கண்ட ஒருவர் மனதில் 
கூட இல்லையடா இங்கு துரிதம்...!

பாதியில் முடியும் இந்த அற்ப 
வாழ்க்கைக்கு ஏனடா பாசிசம்...!

தற்காப்புக்கு தாப்பால் 
போட்டால் பயங்கரவாதம்...!

தடியெடுத்து அடிப்பவன் 
பெயரோ இங்கு பரிதாபம்...!

கொரோணாவிற்கு 
இல்லையடா மருத்துவம்....!

கொடிய விஷம் கொண்ட மனிதனே
நீயல்லவா கொரோணாவை விட பயங்கரம்....!

சதியும் ஒருநாள் விழித்தெழும்...!

மதத்தினால் மயங்கிக் கிடக்கும் மனிதனின் மனமும் ஓர் நாள் உயிர்த்தெழும்....!

சாந்த குணமும் ஒருநாள் 
கொதித்தெழும்..!

மக்களை பிரித்தாளும் 
மதி கெட்ட அரசும் ஓர் நாள் சரிந்து விழும்...!
Create by ✍️ thamim ✍️

மேலும்

மிருகத்தை உலவ விட்டு

மனிதன் உறங்குகிறான்

மேலும்

மனிதனுடைய மிகப் பெரிய குறை, தன்னில் நிறை பெறாமை தான்...
பிறந்த போதே அழுகையோடு, பிறந்தவன் வாழும் போது எது, எதுக்காகவோ ஓயாத அழுகை....
காரணம் என்ன? 
பேராசை தான்...

யாரோ ஒருத்தர் அழகான ஆடை அணிந்து இருந்தால் 
அதே போல் தானும் அணிய வேண்டும் என்ற ஆசை...

பக்கத்து வீட்டு பெண் தங்க நகை அணிந்தால் தனக்கும் அதே போல்
நகை வெண்டும் என்று கணவனைத் தொல்லை செய்யும் மனைவிமார்களே அதிகம்....

உயர் கல்வி, ஆடம்பரமான பள்ளி, கல்லூரி என்று பிள்ளைகளைப் படிக்க வைக்க
அதிக லாபம், லஞ்சம், ஊழல் என்று பெருகிக் கொண்டே செல்கிறது...

இதில் வேதனை என்னவென்றால் அந்த ஆடம்பரத்தில் பெருமை கொள்வது தான்... 

மேலும்

நன்றி.. 30-Jan-2018 7:22 pm
உங்கள் எழுத்து யோசிக்க வைத்தது உண்மையும் கூட 30-Jan-2018 6:14 pm

சதையை மீறி
மனதை பாருங்கள் மனிதா ...

* விளம்பரத்திற்கு இல்லை ...
அவங்களும் மனிதர்கள் தான் ...எல்லா வசதியையும் அவர்களுக்கும் செய்து தாருங்கள் ...

கூவாகத்தில் எல்லா வசதிகளையும் செய்து தாருங்கள் ...
அடிப்படை வசதி எங்கேயும் இல்லை ...
அவர்களுக்கென்று கழிப்பறை வசதி ...உடை மாற்றும் அறை,தங்கும் விடுதிகள்  எதையும் செய்து தரவில்லை ...
இதை நன்றாக பயன்படுத்தி அதிக பணங்களை பறிக்கிறார்கள் விழுப்புரத்தில் ...
அவர்களையும் மதியுங்கள் ...
அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு ...
அவர்கள் இறைவனின் படைப்பில் இறைவிகள் ...







மேலும்

😏போலி மனிதன்🤔

போலி மனிதன் ➡மனிதன் ➡திருவள்ளுவர் 🙏

✒: மருதுபாண்டியன்.க

தூய விதை  கொண்டே படைத்தான் இறைவன்
பல தலைமுறைகளின் பரிணாம வளர்ச்சி கொண்ட 
இன்றைய நிலை - போலி மனிதன்!

பகுத்தறிவு  இல்லாமல் மூடநம்பிக்கையின் கிளைகளை மட்டும் ஒடித்துவிட்டு அதன் வேர்களுக்கு ஆழமாக பதியம் போட்டு கொள்கிறோம் -இன்றும் எடுத்துக்காட்டு  தீண்டாமை!!

எத்தனை  அவதாரம் இறைவன்  எடுத்து சொன்னாலும் -எதிர்மறை சிற்றின்ப எல்லைக்கே மெனக்கெடுவார்!!!  

இரண்டு மூளையின் தவறான முடிவே பல மக்களின் உயிரைக்கொன்றது-அதனை சரித்திரம் என்பார்!!!! 

தெளிவில்லா சிந்தனை கொண்டு போதிக்கும் கோட்பாடுகள் போலி சுவரைக்கொண்டு தாங்கி நிற்கிறது -இதற்கும் தூண்களாய் சில மனிதர்!!!!!


ஊழல், தீண்டாமை , உயிர் கொள்ளும் தீவிரவாதம், தீங்கு விளைவிக்கும் சுயநலம், முறையற்ற காமம், இன்னும் எத்தனை முகங்கள்!!!!!


இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மனிதத்தின் பொருள் புரியுமென்றால் - மீதமுள்ளவர்கள் யார்?  உண்மையான மனிதன்  எங்கே?

போலி மனிதனாய் மாற்றம் கொண்டிருக்கும் இச் சமூகமே இன்றைய நிலை!!!!!

மதி கொண்ட மனிதனின் பரிணாம வளர்ச்சியின் நல்ல நிலையை பதிவு செய்து கொடுத்தார் தெய்வபுலவர்  வரும் தலைமுறைகளுக்கு!!!!!   

ஆனால் போலி மனிதத்தை மட்டுமே விட்டுச்செல்கிறொம் நம் வாரிசுகளுக்கு - பிழை செய்த மனிதன்  மாறினான் போலியாக!!!!!! 

பகுத்தறிவு  மட்டுமே நிஜமான மனிதனாய் வாழ வகுக்கும் 
அன்பு மட்டுமே மனித நேயத்தை வெளிப்படுத்தும் நல்ல ஜனநாயகமே தீண்டாமை ஒழிக்கும்!!!!! 

போலி மனிதத்தை ஒழித்தெறிந்து நல்ல மனிதத்தை பரிசளிப்போம் -இவை அனைத்தும்  நம் கையில் ? 
வரும் நம் வாரிசுகளுக்கு!!!!!!

மேலும்


மேலே