எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோலம்...................

வீட்டு வாசலில் அழகிய 
பல வண்ண நிற கோலம் 
அதை வரைந்து ரசித்த 
பெண்ணிற்கோ  
விதவை என்ற         
கோலம்...........

-பி.திருமால் 

மேலும்

கோலம் வண்ணக் கோலமாகும் போது விதவை சுமங்கலி ஆக முடியாதா என்ன? ஆடவர் முயற்சி செய்தால் சுமங்கலி என்ற கோலம் வரைய முடியும்.. உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள். 23-Oct-2018 10:45 am

உடைந்த இதயம் அழியாத காதல்


பெண்ணே!
கண்ணாடியில் உன்னை பார்க்காதே
அந்த,
கண்ணாடியும் உன்னிடம் காதல் சொல்லும்,
நீ! ஏற்க மறுத்தால்;
அதன் மனமுடைந்து,
கீழே விழும் தன் ரத்தத்தால் 
உன் உருவத்தை,
பல நூறுகளாக வரைந்து விட்டு சாகும்....

- பி திருமால் 


மேலும்

    என் நினைவோடு நீ! 

என் தாயாய் உன்னை பார்க்கின்றேன், 
உன் மடியில் என்னை சுமக்கும் போது! 
என் தந்தையாய் உன்னை பார்க்கின்றேன், 
என்னை அன்பாய் கண்டிக்கும் போது! 
என் நண்பனாய் உன்னை பார்க்கின்றேன், 
என்னை நல்வழி படுத்தும் போது! 
என் குழந்தையாய் உன்னை பார்க்கின்றேன், 
என் நெஞ்சில் உன்னை அணைக்கும் போது! 
என் உயிரை உன்னை உணர்கின்றேன், 
உன் உயிரானவர்களை, 
எனக்காக 
நீ 
விட்டு சென்று வந்த போது! 
என் துணைவியாய்.... 

நாம் நம் மலரும் நினைவுகளை நேசிக்கும் போது, 
அந்த நினைவுக்கு உயிர் கொடுக்கும் துணைவியையும் நேசிக்க வேண்டும்! 

-பி.திருமால்   

மேலும்

தெரியவில்லை


தண்ணீரில் உன்னை வரைந்தேன்,
யாருக்கும் தெரியாமல்!
உன் பாதம்  பட்ட இடத்துக்கு முத்தம் கொடுத்தேன்,
உன் நிழலுக்கும்  தெரியாமல்!
உன் நிழலை  என் உயிராய் கட்டி அணைத்தேன்,
உனக்கே தெரியாமல்! 
ஆனால்,
எனக்கே தெரியாது,
நான் உன்னை நேசிக்கின்றேன் என்று.....

-பி. திருமால் 

மேலும்

தேய் பிறை  

உன் முகப் பொலிவை கண்டதால் தான்
 என்னவோ!
பௌர்ணமி நிலவும், உன் போல் பொலிவு 
தனக்கு இல்லை என்ற ஏக்கத்தில் 
உடல் மெலிகின்றது போலும்!  

                                                              -பி. திருமால்  

மேலும்

  ♥என் உள்ளத்தின் எண்ணங்கள்♥  

மேலும்


மேலே