எண்ணம்
(Eluthu Ennam)
கை பிடித்து நடை பழகி
நாளெல்லாம் கதைகள் சொல்லி
நெஞ்சென்னும் பஞ்சணையில்
உறக்கம் கொடுத்த ஓர் உறவு ....
தென்றலில் ஓய்வெடுக்க..
உறக்கம்தான் மிக குறைத்து
இரவு பகல் பாராமல்..
ஒவ்வொன்றாய் காசு சேர்த்து..
தாய் சிரிக்க தானும் மகிழ்ந்தாள்...
தாய் நிழலை பிரிந்ததில்லை
தந்தை அன்பு கிடைத்ததில்லை..
ருசியறிந்து உண்ட அவள்
பசி மரத்து போனதென்ன...
வருடம் முழுக்க ஆனபின்னும்..
அவமனசு ஏங்குதுங்க திரும்ப
எப்போதான் போவோமுன்னு....
பிறப்பிலோ பெண்ணவள்
துணிச்சலில் ஆண் அவள்...