எண்ணம்
(Eluthu Ennam)
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா
நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pmபோட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 amமன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 amமாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…