எண்ணம்
(Eluthu Ennam)
சந்தையில் தொலைத்த தந்தையை தேடும் பிள்ளை போல்
மனம் உன்னை தேடுகிறது....
உன் கரம் பிடித்து கடந்து வந்த பாதைகளில் இன்று நான் மட்டும் நடந்து செல்கிறேன் கனத்த உன் நினைவுகளோடு ...!
இயங்காத என் நாட்களும்....
சிறைப்பட்ட சிந்தனைகளும்....
எங்கே தொலைத்தேன் என் இயல்புகளை...?
வலிகளில் சரிந்த மனதை ...
வரிகளில் வருட நினைக்கிறேன் வார்த்தைகளும் வர வில்லை...
வெற்று காகிதமாய் ஏனோ நான்..!
மூளையே போதும் எங்காவது ஒரு மூலையில் ஓய்வு எடு ...
சிந்திக்க முடியாமல் சிதைந்து போய் உள்ளேன் ...!
சல்லடையாய் போன மனம் ...
தைப்பதாய் நினைத்து ஊசிகள் மேலும் கிழிக்க ...
மீண்டு வர தான் பார்க்கிறேன்...
ஏனோ மீண்டும் மீண்டும் உடைந்து கொண்டே போகிறேன் வலி மிகுந்த நினைவுகளால் ..
என்னை மீட்டுக் கொடு ...
இல்லையெனில்
மரணத்திடம் காட்டிக் கொடு!
உன்னை நான் தேடுகிறேன் .....
சுற்றி பலர் இருப்பினும்
பற்றிக் கொள்ளும் ஒற்றை பார்வையில் நலம் விசாரிப்பாயே....
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
இரவுகளை குழப்பி
கனவுகளை எழுப்பி...
விடியும் வரை காதல்
கதைப்பாயே..!
அந்த உன்னை நான்
தேடுகிறேன் ...!
முன் விழும் என்
நெற்றி முடிக்கே...
முன்னூறு கவிகள்
முடிப்பாயே!!
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
என் கன்னக் குழி
ரசிக்க காதல் பேசி
சிரிக்க வைப்பாயே ...
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
எட்ட முடியா தூரம்
உன் வானம்
என தெரிந்தும்
சிறகடிக்கும்
என் ஆசைகளும் ....
கண் காணா தொலைவு
கடந்து விட்டாய்
என அறிந்தும்
பின் தொடரும்
என் நினைவுகளும் ....
கானல் நீரில் மீன் பிடித்து,
எட்டுச் சுரக்காயில் விருந்து சமைத்து
காத்திருக்கும்
என் எண்ணங்களும் ....
உன்னை இழந்ததை உணராமலேயே
நினைவுகளில் துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயமும் .....
உண்மை உணர்ந்த பின்
ஓர் நாள் சொல்லும் ...
உன்னை நான் தேடுகிறேன்
அதனாலே இன்று
கல்லறையில் வாடுகிறேன் என்று...!
🖤💚🖤💚நெஞ்சோரம்காதல் வந்ததும் ஆயிரம் கவிதைகள்விரலோரம் சித்திரம்வடிக்க...உடலின் ஒவ்வொரு மைய... (Yasotha Nisan)
24-Oct-2021 6:22 pm
🖤💚🖤💚
நெஞ்சோரம்
காதல் வந்ததும்
ஆயிரம் கவிதைகள்
விரலோரம் சித்திரம்
வடிக்க...
உடலின் ஒவ்வொரு மைய புள்ளியும் நளினமாய்
முத்திரைகள் பிடிக்க...
கொவ்வை நிறம் முகம் எங்கும் கலந்து மாயம் செய்ய...
உன்னோடு சேரும் நாளை நாட்காட்டியில் பிடித்தபடி
காத்திருக்கிறேன் மன
மணவறையில்.....
Yaso ✍️💚