தமிழ் கவிஞர்கள்
>>
கண்ணதாசன்
>>
கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பதில்!
கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பதில்!
அறிவியல் வளர்ந்த பின்பும்
அணுவையும் துளைத்து மேவும்
பொறியியல் மிகுந்த பின்பும்
புதுமைகள் நிறைந்த வீர
நெறிபல கண்ட பின்பும்
நிகரிலாத் தலைவ னென்றே
துறவியைக் காட்டும் வீணர்
தொலைந்தன ரிலையே தோழா!
சங்கராச்சாரியார்தான்
தலைவராம் உலக மாந்தர்
பொங்கியாச் சாரி காலில்
போய் விழல் தரும வாழ்வாம்!
இங்குளர் இளித்த வாயர்
என்பதால் துறவி யான
சங்கராச் சாரி யாரை (த்)
தாங்குவோர் உளரே இன்னும்!
வகுத்ததோர் உலகின் வாழ்க்கை
வழியறி யாத மாந்தர்
பகுத்தறி விழந்து போனார்!
பண்பினை மறக்கலானார்!
தொகுத் தறியாத தாலே
துறவிகளானோர் பாதம்
வழித் தெறிகின்றார்! அந்தோ வாழுமோ தமிழர் பூமி!
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)