பூரிப்பு (குறுங் கவிதைகள் )
வானம்
சிலிர்க்கிறது
புயலைக்கண்டு !
பூமி
துடிக்கிறது
மடியில் சேர்ந்தமைக்கு !
எண்ணங்கள்
போதையாகிறது
நிஜங்களை நம்பி !
கனவு
கவிதையானது
அரங்கேற்றம் பண்ண !
புயல்
பூரிப்படைந்தது
அமைதி தரிசனத்தில் !
கடல்
புன்னகைக்கிறது
புயல் சின்னமானதில் !
புதிய இளங் கதிர்கள்
தலை சாய்க்கிறது
புன்னகை பண்ணிசைத்து !
விடுதலை
தாகம் தணிந்தது
புயல் கடந்ததும் !