அழகின் உரு

நீ அழகின் உரு
உன் விழியின்
ஒரு கற்றை கூட
மின்னத் தகும்

உன் கண்ணின் மணியும்
வின்நிலவின் ஒளியை மங்கச்செய்யும்
உயர் விண்ணில் அது திகழும்
உயர்ந்தவள் நீ மண்ணில் உயர்வாய்

சிலையை வடிக்கும் சிற்பி
சிறிதே பார்த்தால் சிணுங்கி நிற்பான்
சிலை தான் நீ என்று எண்ணி

குழந்தை உந்தன்
குழலும் கூட
கலந்து பாடும்
காற்றோடு

குரலும் உந்தன்
தேனாகும்
தெவிட்டாத புதுமை
தெரியாது !

மழலை உந்தன் மௌனம் கூட
மனதை ஆளும்
மரகத புயலே

எழுதியவர் : sailaja (10-Jan-13, 8:49 pm)
சேர்த்தது : sailaja
பார்வை : 164

மேலே