விழித்திரு பாப்பா ...!

விழித்திரு பாப்பா விழித்திரு
சிறு வயதில் நீ அடம் பிடிப்பாய் ..
அதனை சமாளிக்க முடியாதவர்கள்
பூச்சாண்டி வரும் என்று ..உன்னை வெருட்டி .உன்
வீரத்தையே கிள்ளி விடுபவர்களே உண்மையான பூசாண்டிகல் ...விழிப்பாக இரு ..

பள்ளிப்பருவத்தில் போட்டி போட்டிஎன்று சொல்லியே
உன் சுய சிந்தனையை கிள்ளி விடுவார்கள் ..கவனம்
இவர்கள் தான் முழு சுயநல வாதிகள்

இளைஞர் பருவத்தில் அவனோடு சேராதே இவனோடு சேராதே -நம் சாதியில்லை
சாதிவெறி பிடிந்த நாதாரிகள் இவர்கள்

வாழ்க்கைக்கு நீ வந்த பின்பும் விடமாட்டார்கள் -உன்னை
உன் தலை எழுத்து சரியில்லை என்று சொல்லி சொல்லியே உன் உயிரெழுத்தையே மாற்றிடுவார்கள் கவனமாய் இரு ...

எழுதியவர் : கவிஞர் இனியவன் (14-Jan-13, 5:12 pm)
பார்வை : 168

மேலே