தந்தைக்கு மகள்

பாலைவனத்தை பண்படுத்திய போது
விருட்சமாய் வந்தவன் நீ
பாற்கடலை கடைந்த போது
அமிர்தமாய் வந்தவன் நீ
பசித்திருந்த போது
பழரசமாய் வந்தவன் நீ
கவிதை என்ற போது
கருவாய் வந்தவன் நீ
துங்கும் போது
கனவாய் வந்தவன் நீ
துயரப்படும் போது
துணையாய் வந்தவன் நீ
படிக்கும் போது
ஆசிரியராய் வந்தவன் நீ
தவித்தபோது
தண்ணீருடன் வந்தவன் நீ
காதலித்தபோது மட்டும்
எதற்கு கல்லறை கட்டினாய்

(தந்தைக்கு மகள் )

எழுதியவர் : bhanukl (17-Jan-13, 12:23 am)
பார்வை : 380

மேலே