நாங்கள் ஒன்றும் கிள்ளுக் கீரை இல்லை

கிள்ளுக் கீரை என சொல்லிப் பாருடா
கிழிந்து கீழே விழும் கரிய நாக்குடா....!
மதிச்சா ஒனக்கு தாயாவேன் - அசிங்கமா
நெனைச்சா எரிக்கும் தீயாவேன்....!
ஓடி ஒளிவேன்னு கனவு காணாதே - காலிப் பயலே
ஓதச்சி முடிப்பேன்னு நினைவு வச்சுக்கோ....!
பாலியல் பலாத்காரம் வார்த்தைய தூக்குடா - இனி
பந்தாடப் போறோம் இது தமிழச்சி போக்குடா !
இத்தனூண்டு இருந்துட்டு இம்புட்டு ஆட்டமா....?
இளமை எங்களுக்கும் இருக்குது வாட்ட சாட்டமா..!
இன்ஸ்யூறு பண்ணிப்புட்டு வால நீயும் ஆட்டுடா
இல்லையின்னா துண்டுபட்டு மவனே நீ சாவுடா
டேய் நில்லுடா.....!!!!!