கருவறையும் கல்லறையும்
நல்லவை கெட்டவை கலந்திட்ட
சான்றோர் சதியோர் நிறைந்திட்ட
இருப்போர் இல்லாதோர் அடங்கிட்ட
உலகைக் கண்டிட உறங்கி விழித்திடும்
இருட்டில் இருந்து வெளிச்சம் பார்க்க
தங்கிடும் அறையே கருவறை !
உணர்வுகள் அறவே இழந்திட்டு
வாழ்வின் எல்லையை கடந்திட்டு
இன்பம் துன்பம் அனுபவத்திட்டு
விழித்திட்ட உலகை விலகிட்டு
ஒளியில் விடுபட்டு இருளில் அடங்கி
மறைந்திடும் அறையே கல்லறை !
பழனி குமார்