சாவின் கயிறு...!!!
சாவைத் தொட்டேன்...
சுகமாய் உணர்ந்தேன்...
மீண்டு வந்த பொழுது...
வெறுப்பாய் மிதந்தேன்...!!!
கருப்பு உலகத்தில்...
கை பிடித்து...
சென்றவர் யாரோ...
கண் மூடி...
திறந்த பொழுது...
கை விட்டு...
சென்றவர் யாரோ...!!!
சுதந்திர காற்றை...
சுவாசித்தேன்...
அதில்...
விஷம் இல்லை...
விபரீதம் இல்லை...
கலங்கம் இல்லை...
கடனில்லை...!!!
கண் விழித்த பொழுது...
உணர்ந்தேன்...
பாசக் கயிறுகளின்...
கண்ணீர் ஊற்றுக்களை...!!!
இத்தனை ...
பாசங்களை விட்டு...
நான் போகத் துணிந்த...
இடம் தான் எங்கே?..!!!
சுகங்கள் தேடி ...
இருட்டறை சென்றேனா...
சுயநலம் தேடி...
பாசங்களை...
புதைத்து சென்றேனா...!!!
மனைவி பிள்ளைகள்...
உற்றார் உறவினர்...
நண்பர்கள் கதறல்கள்...
மீண்டும் அழைத்து வந்ததே...
இந்த பூமிக்கு...
புதிய மனிதனாக...!!!