மரம் ! கவிஞர் இரா .இரவி .

மரம் ! கவிஞர் இரா .இரவி .
சுவாசிக்க உதவும்
ரசிக்க உதவும்
மரம் !
பூ காய் கனி நல்கும்
பொதுவுடமைவாதி
மரம் !
அசைவது இல்லை
தென்றல் தீண்டாமல்
மரம் !
வெளியில் தெரியாது
வேர்களின் பயணம்
செழித்திடும் மரம் !
குறிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
மரம் !
சிறிய விதையின்
பெரிய பிரமாண்டம்
மரம் !
நீர் குடித்து
மழைநீர் வரவழைக்கும்
மரம் !
சொல்லில் அடங்காது
நல்கிடும் நன்மை
மரம் !
ஆதாம் தொடங்கி அப்துல்
கலாம் வரை நேசிக்கும்
மரம் !