மரம் ! கவிஞர் இரா .இரவி .

மரம் ! கவிஞர் இரா .இரவி .

சுவாசிக்க உதவும்
ரசிக்க உதவும்
மரம் !

பூ காய் கனி நல்கும்
பொதுவுடமைவாதி
மரம் !

அசைவது இல்லை
தென்றல் தீண்டாமல்
மரம் !

வெளியில் தெரியாது
வேர்களின் பயணம்
செழித்திடும் மரம் !

குறிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
மரம் !

சிறிய விதையின்
பெரிய பிரமாண்டம்
மரம் !

நீர் குடித்து
மழைநீர் வரவழைக்கும்
மரம் !

சொல்லில் அடங்காது
நல்கிடும் நன்மை
மரம் !

ஆதாம் தொடங்கி அப்துல்
கலாம் வரை நேசிக்கும்
மரம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Jan-13, 9:50 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 146

மேலே