சும்மா இரு என்பது மிகப் பெரிய தத்துவம்
எனக்கென்ன பயம் என்றே
எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்
எப்படியோ இருவர் பலம்
எதேச்சையாய் வரக் கண்டேன்....
துணிவும் ஒரு உந்து சக்தி என
தூய மனதோடு அறிந்த போது....
என்ன கர்வமா ? என்றொரு கேள்வி வந்தது
சுயமரியாதை என்று பதில் சொன்னேன்
தலைக்கனம் பிடித்தவன் என்றனர்
தன்னம்பிக்கை நிறைந்தவன் என்றேன்
வாயாடல் ஜாஸ்தி என்றனர்.......
அமைதியை பழகிக் கொண்டேன்.....