சும்மா இரு என்பது மிகப் பெரிய தத்துவம்

எனக்கென்ன பயம் என்றே
எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்

எப்படியோ இருவர் பலம்
எதேச்சையாய் வரக் கண்டேன்....

துணிவும் ஒரு உந்து சக்தி என
தூய மனதோடு அறிந்த போது....

என்ன கர்வமா ? என்றொரு கேள்வி வந்தது

சுயமரியாதை என்று பதில் சொன்னேன்

தலைக்கனம் பிடித்தவன் என்றனர்

தன்னம்பிக்கை நிறைந்தவன் என்றேன்

வாயாடல் ஜாஸ்தி என்றனர்.......

அமைதியை பழகிக் கொண்டேன்.....

எழுதியவர் : HARI HARA NARAYANAN (25-Jan-13, 11:12 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 137

மேலே