எப்படி உன்னால் முடிந்தது என் அனுமதி இல்லாமலே என்னை கட்டிபோட??
இன்னும்
எத்தனை நாட்கள்
காத்திருக்க வேண்டும் உனக்காக!!
என் இதயம்
துடிக்கும் நேரத்தை விட
உன்னை நினைக்கும்
நேரம் தான் அதிகம்!!
தூங்கும் போதும்
என் நினைவில் நீ தான்!!
விழிக்கும் போதும்
என் நினைவில் நீ தான் !!
கனவிலும் நீ தான் !!
உன்னை மட்டுமே
தேடுகிறது என் கண்கள்..
உன்னை பார்த்த அடுத்த நிமிடம்
பூரித்து போகிறது என் இதயம் ..
உன்னை பற்றி மட்டுமே
பேசுகிறது என் வாய் ..
எப்படி உன்னால் முடிந்தது
என் அனுமதி இல்லாமலே
என்னை கட்டிபோட??
உனக்கு தெரிந்த இந்த வித்தை
எனக்கு தெரியாதடா..
தெரிந்து இருந்தால் உன் இதயத்தை
என் வசம் கொண்டு வந்திருப்பேன்!!
அப்போது தான் தெரிந்திருக்கும்
நான் படும் அவஸ்தை உனக்கு ..