கருத்துரிமை சத்தம் போடும் உங்கள் குரல்.... சினிமாக்காரர்களுக்கு மட்டுமா...?
கருத்துரிமை சத்தம் போடும் உங்கள் குரல்.... சினிமாக்காரர்களுக்கு மட்டுமா...?
விஸ்வரூபத்திற்கு கொதிக்கும் நடிகர்கள் தேன்கூடு, ஆணிவேர் படத்திற்கு குரல் கொடுக்காதது ஏன்?...உச்சிதனை முகர்ந்தால் வெளிவேந்தபோது அந்த படத்தின் விளம்பரம் மற்றும் பாடல் காட்சிகள் எப்.எம். மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை...எங்கே போனது கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?...
கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்...காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்...அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்...முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்...பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை காயவைத்தானே அப்போது எங்கே போனது உங்கள் குரல்..."என்னை வாழவைத்த தமிழக மக்கள்" என்று வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது திரு ரஜினி அவர்களே உங்களை வாழவைத்த இந்த மக்கள் இன்று நீரில்லாமல் சாகிறார்களே, வயலெல்லாம் காய்கிறதே ஒரு வார்த்தையாவது காவிரியில் தண்ணீர் விடுங்கள் என்று கேட்கும் துணிவு உங்களுக்கு உள்ளதா?...
தமிழ்நாட்டில் இதுவரை விவசாயம் பொய்த்துபோனதால் 10ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீரை தாருங்கள் என்று எந்த நடிகரிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை...
சேவை வரிக்கு எதிராக குரலிருக்கு...... எங்கள் விவசாயிக்கு எங்கே உங்கள் குரல்...?
குற்றப்பத்திரிக்கை, ஆணிவேர், தேன்கூடு இவற்றிக்கு எங்கே போனது உங்கள் கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?..
40 ஆண்டுகால நண்பருக்கு குரல் ரஜினி அவர்களே நாற்பதாண்டு காலம் உங்களை வாழவைக்கும் தமிழக விவசாயி நீரின்றி சாகிறான் எங்கே உங்கள் குரல்?..
காவிரி பிரச்சனை வந்தால் கர்நாடக நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்...முல்லை பெரியாறு பிரச்சனை வந்தால் கேரளா நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்...ஆனால் தமிழ்நாடு நடிகர்கள் மட்டும் வாயே திறப்பதில்லை...ஏன்?...படத்தில் மட்டும் தங்கச்சி, அம்மா சென்டிமன்ட்...மக்களை ஓடி ஓடி காப்பாத்தறது...இங்கே தண்ணீர் இல்லாமல் செத்தால்கூட எந்த நடிகனும் ஆதரவாககூட தமிழகத்திற்கு இருப்பதில்லை...தமிழன் மட்டும் இவர்களை வாழவைக்கவேண்டும்...ஆனால் இவர்கள் குரல் கூட கொடுக்கமாட்டார்கள்...
ஆக விவாத களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டன என்று கருதலாமா...?
நன்றி
முத்தமிழ் வேந்தன்