தனியே தனியே

என் வாழ்வின் நொடியே....
நான் வாழ்ந்தேன் தனியே .....
கண்களால் சிறகுகள் விரித்தாய் ....
வார்த்தைகளால் கவிதைகள் வரைந்தாய் ..
இதழ்களால் புன்னகை செய்தாய் ........
காற்றுகள் வீச பறந்தேன் மெதுவாய் ..
விழியில் விழியில் விழுந்தேன் ....
தனியே தனியே சென்றேன் ....
கனவுகள் ஏனோ தனிமையில்...நீ துணையாய் ....
....
தனியே தனியே நனைந்தேன் ....
மனமே மனமே தனியாய் ஏனோ குதித்தது காய்ச்சல் போல...
உலகம் தவிர்த்தேன் ஏனோ ....மனதில் தீயாய்....
உணர்வுகள் கூட மறந்தேன் உன் சிரிப்புகளால் ..
ஏனோ நீதான் நீதான் என்னை சுற்றி இருக்கின்றாய் ....
நான் வாழ்ந்தேன் தனியே ..
என் வாழ்வின் நொடியே....
விழியில் விழியில் விழுந்தேன் ....
தனியே தனியே நின்றேன் ....
ஹேய் நீயாரோ நீயாரோ....என்னை சுற்றி இருக்கின்றாய் ....
நான் ஏனோ நான் ஏனோ உன்னை கவிதைகளால் வரைகின்றேன் ....
சாலையில் செல்லும்போதும் ஏனோ நீயும் தெரிகின்றாய் ...
மௌனமாய் திரிந்தேன் ...புயலாய் வாழ்ந்தேன் ....
இன்று ஏனோ அமைதியாய் நடக்கின்றேன் ...
ஹேய் நீதான் நீதான் என்னை சுற்றி இருக்கின்றாய் ...
சொல்லாமல் சொல்லி பார்த்தேன் ..
கூறாமல் கூறியும் பார்த்தேன் ..
வரையாமல் உன்னை மனதில் வரைந்தும் பார்த்தேன் ...
நீயும் முதலாய் சொல்லாமல் சொன்னாய் ..
அன்று என்னையும் வெல்லாமல் வென்றாய் ..
இன்று ஏனோ அறியாமல் செல்கின்றாய் ...
தனியே தனியே சென்றேன்...
விழியில் விழியில் விழுந்தாய் ...
விலகிதான் போனேன் தனியே ....
விதி ஏனோ ....விதி ஏனோ ...
காற்றுகள் வீச பறந்தேன் மெதுவாய் ..
வருவேன் வருவேன் வாழ்வும் முழுதாய். முதலாய் ..
என்று நீ தான் முதலில் கூறி சென்றாய் ..
இன்று நீயே விலகியும் .முழுதாய். முதலாய் செல்கின்றாய் ..
விழியே விழியே விரைவில் ஏனோ.....
என் வாழ்வின் அந்த நொடியே....
நான் வாழ்கின்றேன் தனியே .....
தனியே தனியே ......நான் என்றும் தனியே ,,,,,
நீதான் ஏனோ இன்றும் மனதில் நிற்கின்றாய் ...
ஆனால் நீ தான் ஏனோ விலகிச் செல்கின்றாய்...
தனியே தனியே
என் வாழ்வின் நொடியே....
நான் வாழ்கிறேன் தனியே .....
மீண்டும் தீயாய் இருக்க விரும்புகிறேன் ..
ஆனால் நீ தான் என்னை ஏனோ மாற்றிவிட்டாய் ...
ஆனால் நான் தான் இன்று......தனியே தனியே

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (5-Feb-13, 8:06 am)
சேர்த்தது : SURIYA
Tanglish : thaniye thaniye
பார்வை : 140

மேலே