ஐயோ, தெய்வமே

மனைவி: நான் இறந்து விட்டால் நீங்கள்

இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?

கணவன்: கண்டிப்பாக மாட்டேன்!

மனைவி: ஏன்? மணமானவராக இருப்பதில்
உங்களுக்கு மகிழ்ச்சி தானே?

கணவன்: நிச்சயமாக, அதிலென்
ன சந்தேகம்?

மனைவி: பின் ஏன் மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

கணவன்: சரி! செய்து கொள்கிறேன்.

மனைவி: ஓஹோ, அப்படியா? (ஒரு அடிபட்ட பார்வையுடன்!)

கணவன்: (சத்தமான பெருமூச்சும், கவலையும்!)
மனைவி: நம் வீட்டில் தான் வாழ்வீர்களா?

கணவன்: ஆம், இது நல்ல வீடு தானே.

மனைவி: அவளுடன் நம் மெத்தையில் தான் படுத்து உறங்குவீர்களா?

கணவன்: பின் வேறெங்கு உறங்குவது?

மனைவி: என் காரை அவள் ஓட்ட அனுமதிப்பீர்களா?

கணவன்: அனுமதிக்கலாம், அது புதுசு தானே!

மனைவி: இவ்வீட்டில் இருக்கும் என்னுடைய புகைப்படங்களை எடுத்து விட்டு அவளுடையதை மாட்டுவீர்களா?

கணவன்: அதில் பெரிய தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.

மனைவி: என் கோல்ப்· (GOLF) குச்சிகளை அவள் பயன்படுத்துவாளா?

கணவன்: மாட்டாள், அவள் இடது கைப்பழக்கம் உடையவள்!

மனைவி: (புயலுக்கு முன்னே அமைதி!!!)

கணவன்: ஐயோ,நீதான் என் தெய்வம் ..........?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (13-Feb-13, 5:59 am)
பார்வை : 296

மேலே