தன்னிறைவை பழகிக் கொண்டேன்

மலர்களை பார்ப்பதற்கு முன்
மகிழ்ச்சியை தேடிக் கொண்டிருந்தேன்

மலர்களை பார்த்த பிறகே
மகிழ்ச்சி உருவாக்கப் படுவதை உணர்ந்தே

பூக்களைப் போல இப்போது
புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்.....

பூவே......உன்னிடமிருந்தே நான்
தன்னிறைவை பழகிக் கொண்டேன்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (15-Feb-13, 10:13 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

மேலே