கல்லூரிக் காலம்..
உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள்,
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல,
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும்,
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.
நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை
அல்லது ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்
நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும்.
தொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை.
நினைவுகள் அப்படி இல்லை, தொலைந்தவற்றை மீட்டிக்கொள்ளும். காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம் இது..
மூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை.
கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை.
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.
உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை.
கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை.....
நட்பு, காதல் நிறைந்த எம் ஒவ்வொருவரின் கல்லுரி வாழ்வு
நட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது.
காதலை விட ஒரு படி மேலானது. தன்நலம் பாராத ஒரு உறவு. பேச்சில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்..
நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு.
ஒரு கயிற்றுப் பாலத்தில் இருவர் நடக்க முடியுமா..?? முடியும் என்றால் நட்பில் மட்டும்தான். பாலைப் பார்த்து கள் என நினைப்பதல்ல நட்பு, கள்ளை பார்த்து பால் என்பதே உண்மையான நட்பு.
வானம் அழகானது தான் வெளிச்சமாய் இருக்கும் போதும் இருட்டிவிட்டாலும். பகலில் சூரியனால், இரவில் நிலாவால். நட்பும் அதுபோல் தான்.
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்தில் தோழனால்...
சந்தோசத்தில் நண்பியால்...
'கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு' இது சரியா
'நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு' இது சரியா..?
புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயதில் தான் முதல் நட்பின் ஆரம்பம்.
நட்பு
எண்ணங்கள் வேறுபட்டாலும்
எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி
இணைந்து விடும்
உன்னத உறவு.... நட்பு
உரிமை கொண்டாடுவது உறவு
ஆனால்
உறவைக் கொண்டாடுவது நட்பு தானே...
நட்பில் தான்
வருணம் இல்லை...
நட்பில் தான்
போலி இல்லை..
நட்பில் தான்
பொய்கள் இல்லை....
நட்பு என்பது பொது நலம்
மட்டும் அல்ல
சுயநலமும் கூட...
நட்பு கோடையிலும் வசந்தம்..
நட்பு வெறிக்கான ஏணி..
குட்டி உலகம் நட்பு...
கடவுள் படிக்கும் புத்தகம் நட்பு...
உலகம் வேண்டுமா
நட்பு கொண்டு பார்...
ஆயுள் இரட்டிப்பாகவேண்டுமா
நட்பு கொண்டு பார்...
நட்பு என்பது சத்துணவு
இழந்தால்
ஆரோக்கியம் கெட்டுவிடும்...
நட்பு என்பது புன்னகை
இழந்தால்
அத்தனையும் கெட்டுவிடும்...
அத்தனையும் செயற்கை
நட்பை தவிர...
கோவில் வாசலில்
சிந்தி கிடக்கும் பூக்களை போல
கல்லூரி வாசலில் நட்புகள்
ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் பச்சைப் புற்கள்
எப்படி முளைத்திருக்கும்...
புல் நுனியில்
அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பனித்துளிதான்
எம் நட்பு...
உன்னை நானும்
என்னை நீயும்
முதல் முறை
பார்த்துக் கொண்டோம்..
அப்போது தான்
பூத்திருக்கவேண்டும்
இந்த நட்பு....
மழையும் வெயிலும்
சந்தித்தால் வானவில்...
நானும் நீயும்
சந்தித்ததால் நட்பு..
பாலர்வகுப்பில்
ஒற்றை ஊஞ்சலுக்காய்
அடிபட்டுக்கொண்டோம்,
திடீரென விலகினாய் அப்போதே
முழுமை அடைந்துவிட்டது
எம் நட்பு
அற்ப விசயங்களுக்கும்
சண்டை பிடித்தோம்...
நட்பு பலமடைந்தது...
அதிக விசயங்களுக்கு
சண்டை பிடிக்காதிருந்தோம்
நட்பு இன்னும் பலமடைந்தது...
போட்டி போட்டு
பொய் சொல்லியிருக்கிறோம்
உன்னை நானும்
என்னை நீயும்
காப்பாற்றிக்கொள்ள...
பொய்களை காப்பாற்ற
எத்தனை கதைகள்
நீ சொல்லியிருக்கிறாய்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
என் கற்பனைகளின் நாயகன் நீ...
அப்பாவின் திட்டுக்களை விட
உனது மௌனம் அர்த்தமானது...
அம்மாபோல் என்மேல்
அதிக அக்கறை கொண்டவன் நீ ...
நட்பை தவிர அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...
உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..
என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...
பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...
உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..
கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...
ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..
ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...
வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...
நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...
உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...
கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...
ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...
ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...
ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...
ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....
வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....
தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..
தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...
இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..
நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...
இருந்தும்
காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...