தீவிரவாதம்.. ஒரு முயற்சி...

அறைகுள்ளே மறைத்திருந்தும் ,
உள்ளம்!!!
கறைபடிந்து கிடக்குதிங்கே...
ரத்தபசி எடுத்துயேனோ,
ராட்சசனாய் அலையுதிங்கே...

நிரந்தரமாய் தங்குமிடம்,
தரணியிலே இல்லை...
வந்து போகும் வாழ்க்கையிலே,
ஏன்???
எமதர்மன் வேலை???

படைத்தவனின் பேர்சொல்லி,
பாரில் கிடைதவனை அழிக்காதே...
சாதி மத சாக்கடையை,
மனித சமுத்திரத்தில் கலக்காதே...

ஆட்டிறைச்சி ஆசையின்று,
ஆள்ளிறைச்சி ஆனதோ...
வெட்டி சாய்க்கும் வேலை வேண்டாம்,
வாழ வேறு ஜீவன் இல்லையே...

கொள்கையென்று பெயர்வெய்து,
கொடுஞ்செயலை புரியாதே...
பூத்துகுலுங்கும் பூமியிலே,
அனுவிதையை விதைக்காதே...

கல்லறைகள் கோடி கண்டும்,
உந்தன் கல்நெஞ்சம் உறுத்தலையா...
குழந்தை பல அழிய கண்டும்,
உந்தன் கீழ் புத்தி அழியலையா...

மதங்கள் சிலை நொறுங்குவதால்,
மனிதர் தலை உருளுவதா...
மனிதநேயம் வேணுமடா,
மறவாதே!!!
மரணம் உனக்கும் இருக்குதடா...

எழுதியவர் : பாலாஜி (16-Feb-13, 3:43 pm)
பார்வை : 172

மேலே