காந்தியும் காக்கையும்!
![](https://eluthu.com/images/loading.gif)
கோலெடுத்தால் காக்கைகள் மிரண்டோடும்
ஆனாலும்
இவர் அகிம்சா என காக்கையும் அறிந்ததோ?
அதனால் அடைக்கலம் புகுந்ததோ?
மனுசனுக்கு இடமில்ல
தரையில வீடுகட்ட!
அதனால் எனக்கும்
மரமில்ல கூடுகட்ட!
மேல் சட்ட போடாம
மேதாவி ஆகிபுட்ட!
அகிம்சா கொண்டுதான்
அகிலத்த காத்துபுட்ட!
ஒரே விழிதான் உண்டெனக்கு
உலகத்த நான் பாக்க
ஒரே வார்த்தைதான் நீ சொன்ன
உலகத்த நீ காக்க!
அகிம்சா!!!