பரத்தையின்மகள்.....

பணத்திற்காக....
பொருட் பெண்டிராய்
பரத்தையாய்
விலை மாதராய்
வேசியாய்
விபச்சாரியாய்
சிவப்புவிளக்கு அழகியாய்
படுத்துறங்கும் நேரம்
பணியாற்றுபவளுக்கு
காலமாற்றத்துக்கு ஏற்ப
புது புதுப் பெயர்ப் புனைவு
ஈன்று புறந்தள்ளி .............
உச்சிமுகர்ந்து முத்தமிடும் அவளை
நான் மட்டும்அழைத்தேன்
அம்மாவென்று..............

எழுதியவர் : munaivar va inthiraa (21-Feb-13, 9:03 pm)
பார்வை : 96

மேலே