மூச்சு நின்ற அடுத்தநாள் ...!

நான் எழுதிய கவிதைகளை பார்த்து ..
நானே சிரித்துக்கொண்டிருக்கிறேன்...
இதுதான் என் கவிதைகளா...?
நன்றாகவே இல்லை ....!

என்றோ ஒருநாள் -நான்
யாருமே எழுதியிராத ...
என் கவிதையை மட்டுமே எல்லோரும்
விரும்புகின்ற ....?
காதாலையோ இயற்கையையோ ..
சாராத .......!
யாரையும் எதையும் சாராத ...?
கவிதையை எழுதுவதற்கு பயிற்சி
எடுக்கிறேன் .......!
நிச்சயம் நான் எதிர் பார்த்த கவிதையை
எழுதியே தீருவேன் ...!
என் மூச்சு நின்ற அடுத்தநாள் ......!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Feb-13, 8:45 pm)
பார்வை : 139

மேலே