பிரிவு

பிரிக்க நினைக்காதே
என்னுள் கலந்திட்ட உன்னை
ஏனெனில் பிரிவது முதலில்
என் உயிராகத்தான் இருக்கும்...

உன்னை மட்டுமே நினைத்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ இல்லை என்றால் என்
வாழ்க்கை முடிந்துவிடும்
நீ பிரியும் அந்த ஒரு நொடியில்..

பிரிவு என்ற சொல்லே
நமக்கிடையில் இடம்பெற
கூடாது என்று விரும்பிய நான்
இன்று உன் பிரிவையும்
விரும்பி ஏற்கிறேன் நீ
விரும்பி கொடுப்பதால்..

எழுதியவர் : சுகி (22-Feb-13, 5:27 pm)
Tanglish : pirivu
பார்வை : 262

மேலே