முதியோர் இல்லம்....

இல்லறத்தில் இணைந்த பின்
இல்லத்தில் இருந்த உன்னை
முதியோர் இல்லத்தில்
இணைத்தேன்
இதயவலியால்..........
இவ்வுலகைவிட்டு
இன்னுயிர் துறந்தாய்
இவ்உலகிற்கு நான் வரக்காரணமானவளே
இன்னல்களோடு எனை சுமந்தவளே ---உன்
இரத்தத்தை உணவாக அளித்தாய்
தாய் பாலாய்
மறித்துப்போக நான் காரணமானேன்
மண்சட்டிதூக்கி நான் முன்னேபோக
பின்னால் வருகின்றாய்
தேரில் உறங்கும் தேவதையே
நீ பிணமானாய் ......
நான் நடை பிணமானேன்

எந்நன்றி கொன்றார்க்கும்.......
..........................................மகற்கு,

வள்ளுவத்தின் வாய்மொழி
நான் வாழும் வரை வருத்தும் தாயே.....

எழுதியவர் : வ .இந்திரா (23-Feb-13, 2:39 pm)
பார்வை : 122

மேலே