போதிக்கப்பட்ட அவஸ்தை

ஒடித்திரிந்த கால்களில்
அம்மாவின் முக்காலி உருட்டலும்
அப்பாவின் யானை அம்பாரியும்
வாகனத்தின் ஒவ்வொரு துகளிலும் கலந்து
தெருக்களும் தேகத்தில் சுமந்திருக்கிறது,
வேதனைக் காலங்களென்று
மறுதலித்த பழக்கவழக்கத்தை
சுகவாசியான போது
கடைபிடித்த கடையனாகி,
அல்லோலப்பட்ட மனசு
தூரத்து இடிமுழக்கம் கேட்டு
விழுந்த சாகும் வெள்ளாடாய்,
தொழில் நிமித்தம்
பெத்தவங்களைப் பிரியும் பட்டண வாழ்வும்
பரிதாபம் சம்பாதிக்கிறது,
இந்த முழுமையற்ற வாழ்வில்
இழந்த கணங்கள் பெற்ற பொழுதைக்காட்டிலும் அதிகம்
திடீர் சாவில் கலந்து
திருமண‌த்தில் இருந்திருக்க முடியாது
உற‌வுகளின் நீட்சி
விழாக்களின் தொடர்பில் வாழ்கிறது
இது போதிக்கப்பட்ட அவஸ்தை
நாளுக்கு நாள்
நெஞ்சுக்குள் ஆசைப்புற்று போல் வளர்கிறது.

எழுதியவர் : -வாலிதாசன்- (26-Feb-13, 3:39 am)
சேர்த்தது : mukavaivaalidhasan
பார்வை : 93

மேலே