*****.......வர வேண்டாம் இங்கு ......*****

கண்ணீர்
காவியம் - எழுதின
கண்கள்
விடுதியின்
விதியில்
வினாடிகள் கூட
நனைந்தன
விழி வரைந்த
விதியால்
புதிய மொட்டொன்று
சிலிர்த்தெழுந்த
மறு கணமே
ஈசலாகிப்போன
மாயம் - தான்
என் வாழ்வு
குடம்பியாய்
வாழ்ந்த
காலமெல்லாம்
பறக்கவென ஆசைப்பட்டேன்
கண்களை மூடிக்கொண்டு
சிறகு முளைத்து
விரித்தவுடன்
சிக்கிக் கொண்டது - விழி திறந்த போது
நிஜம் தெளிந்தது
சிறைக்குள் அடைக்கப்பட்டதாய்
அடுத்துள்ள சந்ததிக்கோர்
அன்பான வேண்டு கோள்
வர வேண்டாம் இங்கு ........................
(@hostel)