தூரிகை மந்திரம்

தீட்டிய ஓவியம் தீண்டியது நெஞ்சை
வாட்டிய நினைவுகள் மறக்குது !
வாஞ்சையுடன் வருடுது உள்ளத்தை
வாசமிலா மலர்கள் பாசமுடன் !
சிந்தையோ குளிருது சிந்திய வண்ணங்கள்
சிறகடித்து பறக்குது எண்ணங்கள் !
சிந்தனை மாறுது கண்டிடும் காட்சியால்
சிதறிய மனமோ அமைதியாகுது !
விழிக்கு விருந்தாய் துயர்க்கு மருந்தாய்
விளங்குது தூரிகை மந்திரம் !
பழனி குமார்