தூரிகை மந்திரம்

தீட்டிய ஓவியம் தீண்டியது நெஞ்சை
வாட்டிய நினைவுகள் மறக்குது !

வாஞ்சையுடன் வருடுது உள்ளத்தை
வாசமிலா மலர்கள் பாசமுடன் !

சிந்தையோ குளிருது சிந்திய வண்ணங்கள்
சிறகடித்து பறக்குது எண்ணங்கள் !

சிந்தனை மாறுது கண்டிடும் காட்சியால்
சிதறிய மனமோ அமைதியாகுது !

விழிக்கு விருந்தாய் துயர்க்கு மருந்தாய்
விளங்குது தூரிகை மந்திரம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Mar-13, 9:06 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 157

மேலே