நேற்று தமிழாய் பிறந்தேன்

பள்ளியில் நான்
படித்து வந்தது
தமிழ் தான்

நான் எழுதிய
முதல் கவிதை
தமிழ்

என்னை கவர்ந்த
பெண்ணின் பெயர்
தமிழரசி

முதன்முதலாய் நான்
எம்பள்ளி தமிழ் குருவின்
சிபாரிசில் தான்
வேலைக்கு
சென்றேன்

ஆக மொத்தம் நான்
தமிழாய் தமிழை
படித்தேன்

எழுதியவர் : குருநாதன் (6-Mar-13, 11:53 pm)
பார்வை : 219

மேலே