நீயும் நானும் - நாம் ஆகியதால்

என் கவிதைகளை மெருகேற்றினேன் -
கவிதைகள் :
உனக்குப் பிடிக்கும் என்பதற்காக ,

தனித் திறமைகளை - உன்னிடம்
வெளிப்படுத்தினேன் :
நீ பாராட்டுவாய் என்பதற்காக

என் சோகங்களை
பகிர்ந்து கொண்டேன் :
நீ ஆறுதல் அளிப்பாய் என்பதற்காக

என் தனிமையை
உனக்கு உணர்த்தினேன் :
நீ என்னுடன் இருப்பாய் என்பதற்காக

நான் செய்த - இவை எல்லாம்
நாம் ஒன்றாக
வாழ வேண்டும் என்பதற்காக ...

அவனை மணம் முடிக்க சொன்னது -
நீ நன்றாக
வாழ வேண்டும் என்பதற்காக..!

எழுதியவர் : Madhan (7-Mar-13, 3:02 am)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 162

மேலே